என்றாவது நினைவுக்கு வரட்டும்
இந்த நாளும்..
நம்மிருவர் காதலுக்கு சாட்சியாக
நிலவும் அந்த நீண்ட இரவையும்
தவிர வேறு யாருமில்லை..
விழித்துக்கொண்டே இருந்தது
அவ்வப்போது இடைவெளிவி்ட்டு
நம்மைப்போலவே
அந்தப் பி்ன்னிரவும்..
விண்மீன்களெல்லாம் உறங்கி
வெகுநேரமாகிவிட்டது..
மகிழ்ச்சியின் உறக்கமாயிருக்கலாம்..
தேடல்களெல்லாம் முடியும் வேளையில்
தான் இங்கே தொடங்கப்பட்டது..
அசைவின்றிக் கிடந்தது உதிர்ந்த
இதழ்களெல்லாம்
ஆதலினால் வியர்வைகள்
துளிர்த்திருக்கலாம்..
அர்த்தப்படாத கனவாய்க்கூட
இருக்கலாம்..
மகிழ்வு மறுநாள் தலைதுவட்டிக்
கொண்டது மட்டும் ஏனோ ?
எல்லாம் முடிந்தது
எண்ணிக் கழிந்த நாளும்
முந்நூறைத் தொட்டது..
எல்லாம் கனவாகவே கூட
தொடரலாம்..
அந்தப் பெயர் சொல்லி
யாரோ யாரையோ அழைக்க
நீ திரும்பிப் பார்த்தலில்
நான் தெரியலாம் காட்சியாக
எல்லாவற்றிற்கும் சாட்சியாக...
Total Pageviews
Wednesday, 23 September 2015
நிலவின் சாட்சியாக
Tuesday, 22 September 2015
ஆசை
எனக்காக என்னடா செஞ்ச இதுவரைக்கும் என நீ கேட்கும்போதெல்லாம்
வார்த்தைகளில்தான் சமாளித்துப்
புன்னகைக்கிறேன் ஒவ்வொரு முறையும்..
உள்ளே அழுவது உனக்கும்
புரியுமென ..
அழகிய ஊர் அது...
ஊரின் நடுவில் மலைகளில்லை..
வெள்ளாடுகள் மேய்வதையெல்லாம் பார்க்கமுடியாது..
எல்லாத் திசைகளிலும் பூக்களாகவே இருக்கும் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது..
பிள்ளையார் கோயிலும்
பொல்லாக்குளமும்
நெல்லிக்காய் மரமும்
அவ்வளவு அழகு..
என நான் சொல்வதையெல்லாம் விட அழகானது கிருங்காக்கோட்டை.
ஏனெனில்
அது இந்துக்குட்டியின் ஊர்..
Thursday, 17 September 2015
சுவை
கொழுக்கட்டைத் தட்டை நீட்டி
அம்மா குடுத்துச்சு இந்தாங்க
எனச் சொல்லும் எல்லாக்
குழந்தைகளும் அவளைப்போலவே
தெரிகிறதெனக்கு..
ஆனால், நீ சாப்டு செல்லம் என்றவுடன் முதல் கடி தான் கடித்து மறுபாதியை ஊட்டிவிடும் இந்துக்குட்டியின் கொழுக்கட்டைச் சுவைதான் இப்போதைக்கில்லை..
Sunday, 13 September 2015
சாட்சி
ஒட்டுமொத்தப்
பிரியங்களின்
சாட்சியாக
அதோ இன்னும்
பறந்துகொண்டே
இருக்கிறது
ஒற்றைப் புறா
உயிர்விடவில்லை..
எப்பொழுதும்
போலவே இதுவும்
புரியாது உனக்கு..