என்றாவது நினைவுக்கு வரட்டும்
இந்த நாளும்..
நம்மிருவர் காதலுக்கு சாட்சியாக
நிலவும் அந்த நீண்ட இரவையும்
தவிர வேறு யாருமில்லை..
விழித்துக்கொண்டே இருந்தது
அவ்வப்போது இடைவெளிவி்ட்டு
நம்மைப்போலவே
அந்தப் பி்ன்னிரவும்..
விண்மீன்களெல்லாம் உறங்கி
வெகுநேரமாகிவிட்டது..
மகிழ்ச்சியின் உறக்கமாயிருக்கலாம்..
தேடல்களெல்லாம் முடியும் வேளையில்
தான் இங்கே தொடங்கப்பட்டது..
அசைவின்றிக் கிடந்தது உதிர்ந்த
இதழ்களெல்லாம்
ஆதலினால் வியர்வைகள்
துளிர்த்திருக்கலாம்..
அர்த்தப்படாத கனவாய்க்கூட
இருக்கலாம்..
மகிழ்வு மறுநாள் தலைதுவட்டிக்
கொண்டது மட்டும் ஏனோ ?
எல்லாம் முடிந்தது
எண்ணிக் கழிந்த நாளும்
முந்நூறைத் தொட்டது..
எல்லாம் கனவாகவே கூட
தொடரலாம்..
அந்தப் பெயர் சொல்லி
யாரோ யாரையோ அழைக்க
நீ திரும்பிப் பார்த்தலில்
நான் தெரியலாம் காட்சியாக
எல்லாவற்றிற்கும் சாட்சியாக...
Total Pageviews
Wednesday, 23 September 2015
நிலவின் சாட்சியாக
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment