Total Pageviews

Showing posts with label பின்னிரவுப் புலம்பல்கள். Show all posts
Showing posts with label பின்னிரவுப் புலம்பல்கள். Show all posts

Friday, 4 December 2015

கண்ணீரின் காதலன் நான்

எல்லாவற்றிற்கும் அழத்தான் செய்கிறேன்
ஆண்பிள்ளை அழலாமா எனக் கேட்பவர்களையெல்லாம் அருகேயழைத்து அழவைத்துவிடுகிறேன்.
ஐ லவ் யூ சொன்னாலும் அழுகிறேன்
வெறுப்பதாகச் சொன்னாலும் மறைத்தபடி அழுகிறேன்
கட்டிக்கொண்டாலும் அழுதுதீர்த்து விடுகிறேன்
நீ இருக்கும்போதும் அழுகிறேன்.
நீயில்லாதிருக்கப்போகும் நாட்களை நினைத்தும் அழுகிறேன்
அது மட்டும் கூடவே இருக்கிறது
எல்லா இரவுகளிலும்
உன்னை விடவும்..


Sunday, 13 September 2015

சாட்சி

ஒட்டுமொத்தப்
பிரியங்களின்
சாட்சியாக
அதோ இன்னும்
பறந்துகொண்டே
இருக்கிறது
ஒற்றைப் புறா
உயிர்விடவில்லை..
எப்பொழுதும்
போலவே இதுவும்
புரியாது உனக்கு..