Total Pageviews

Thursday, 16 April 2015

கவிதையொன்று உதிர்கிறதே...

படம்:முகநூல்



ஒரு பார்வை
ஒரு தலையாட்டல்
ஒரு ஆச்சரியம்
ஒரு புருவம் உயர்த்தல்
ஒரு கண்சிமிட்டல்
ஒரு புன்னகை
ஒரு மகிழ்ச்சி
ஒரு உதட்டுச் சுழிப்பு
ஒரு மௌனம்
ஒரு வார்த்தை
ஒரு முத்தம்
ஒரு மழலை
ஒரு விரலசைவு
ஒரு கைகோர்ப்பு
ஒரு தலைகோதுதல்
ஒரு அரவணைப்பு
ஒரு தவிப்பு
ஒரு ஏக்கம்
ஒரு பாசம்
ஒரு பரிவு
ஒரு சீண்டல்
ஒரு சண்டை
ஒரு சிணுங்கல்
ஒரு அழுகை
ஒரு சமாதானம்
ஒரு வெளிச்சம்
ஒரு இருள்
ஒரு நிலவு
ஒரு மழை
ஒரு மலர்
ஒரு மரம்
ஒரு தனிமை
ஒரு நேசம்
ஒரு உணர்வு
ஒரு தேநீர்
ஒரு பேருந்து
ஒரு பயணம்
ஒரு குறுஞ்செய்தி
ஒரு வாசணை
ஒரு இரவு
ஒரு கனவு
ஒரு நாள்
ஒரு மாலை
ஒரு தூக்கம்
ஒரு அழைப்பு
ஒரு ஹலோ
ஒரு நிழல்
ஒரு பள்ளி
ஒரு நினைவு
ஒரு அதட்டல்
ஒரு காத்திருப்பு
ஒரு கையசைத்தல்
ஒரு அச்சம்
ஒரு ஜன்னல்
ஒரு கதவோரம்
ஒரு மாடிப்படி
ஒரு வெட்கம்
ஒரு 'ப்போ'
ஒரு சாக்லேட்
ஒரு சாத்துக்குடி ஜூஸ்
ஒரு புகைப்படம்
ஒரு தழுவல்
ஒரு கண்ணீர்
ஒரு விசும்பல்
ஒரு நடை
ஒரு காற்று
ஒரு வானம்
ஒரு பரிசு
ஒரு எச்சில்
ஒரு சிரிப்பு
ஒரு நீ
ஒரு நான்
ஒரு பேரன்பு
இன்னும் எத்தனை
'ஒரு'க்கள் இந்த
ஒரு காதலில்..
ஒவ்வொன்றும்
ஒரு கவிதையல்லவா ?
உன் தலையிலிருந்து
உதிரும்
ஒரு மல்லிப்பூவும்
ஒரு கவிதையொன்றை
உதிர்த்திடுமே ...



Posted via Blogaway


No comments:

Post a Comment