ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும்
ஒரு துளிக்குள் அடங்கிப்போகும் .
அது வறண்ட நிலத்தில்
விழுந்த முதல் சொட்டு
மழையாக இருக்கலாம் .
கன்றுக்குட்டி முட்டிக்
குடிக்கும் தாய்ப்பசுவின்
மடியில் சுரந்த
சீம்பாலாய் இருக்கலாம் .
காலையில் நடக்கையிலே
சாலையோரப் புல்லில்
தகதகத்து சூரியனையும்
ஒளித்துவைக்கும் சிறு
பனித்துளியாய் இருக்கலாம் .
அந்த நேரத்து அமைதியைக்
கலைக்கும் வண்ணம்
குழாயில் 'க்ளுக்'கெனச்
சொட்டும் ஒருதுளித்
தண்ணீராய் இருக்கலாம் .
குழந்தைகளைத் தூக்கிக்
கொஞ்சுகையில் சிந்தும்
எச்சிலாய் இருக்கலாம் .
அன்புக்குரியோரின்
வெறித்த பார்வையை
விலக்க எண்ணி
விரலால் தொட்டு முகத்தில்
தெளித்த குளிர்பானமாய்
இருக்கலாம் .
உழைத்துக் களைத்து
வீடு வந்த கணவனின்
முகம் நோக்கி மனைவி
புடவைத் தலைப்பால்
அழுத்தத் துடைந்த
அந்த ஒருதுளி
வியர்வையாய் இருக்கலாம் .
அந்த ஒரு துளி
இப்படி அழகாய்த்தான்
இருக்கவேண்டும்
என்பதில்லை .
மாதவிடாய் வலியின் ஊடே
சப்தமின்றிக் கதறும்
பெண்ணின் உடையில் சிந்தும்
உதிரமாகவும் இருக்கலாம் .
அந்த ஒரு துளி...
பாலின்றிப் பசியில் அழுது
தாய்முலை தேடும் குழந்தை
அதைப்பெற்ற ஏழைத்தாய்
வேதனையுடன் அழச்சக்தியற்று
விசும்ப அதில் கரைந்த
கடைசிச் சொட்டுக்
கண்ணீராய்க் கூட
இருக்கலாம் ..
Total Pageviews
Wednesday, 15 April 2015
ஒரு துளி வலி..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment