Total Pageviews

Sunday, 29 March 2015

எங்கே எந்தன் சங்கத் தமிழ்..?

நீதியும் நெறிகளும் தவழ்ந்த
என் தமிழ் எங்கே?
வீரமும் ஈரமும் கலந்தே
விளைந்த எந்தமிழ் எங்கே ?
முதல்நாள் போரிலும் அதற்கு
முந்தைய நாள் போரிலும்
தன் கணவனையும் தகப்பனையும்
இழந்த அந்த வீரத்தாய்
மூன்றாம் நாள் போர்முரசு கேட்க
தன் பச்சிளம் பாலகனைத்
தலைசீவி உடையிட்டு
போருக்கு அனுப்பிய அந்தப்
புறநானூற்றுத் தமிழ் எங்கே?

அதனையும் மிஞ்சிய இன்னொரு
புறநானூற்றுத் தாயொருத்தி தன்மகன்
போரிலே புறமுதுகிட்டான் எனக்கேட்டுச்
சினங்கொண்டாள்.செருக்களம்
சென்று உடல்களைப் புரட்டிப்பார்த்தாள்.
நெஞ்சில் வேல் குத்தி தன்மகன்
வீழ்ந்துகிடக்க பெருமைகொண்ட
அவள் மடியில் கிடத்தி மகிழ்ந்தாளாம்.
அந்தத் தமிழ் எங்கே?
படிப்பவர் புல்லரிக்கும் அந்தச்
சங்கத் தமிழ் எங்கே ?

பாரதியும்,அவன் தாசனும் நெஞ்சினுள்
உரமேற்றிய அந்த இடைத்தமிழ்
எங்கே?
வீறுகொண்ட நெஞ்சினாய் வா..
என்றழைத்த எம் தமிழ் எங்கே ?
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு..
என முழங்கிய தாய்த்தமிழ் எங்கே?

காற்றும்,மழையும்,வறண்ட பாலையும்,
வற்றிய கடலும்,வனமும்
கவிதையாகும் என் தமிழில்.
தாமரை மலரும்,தண்ணீர் அல்லியும்
மட்டுமா கவிதையாகும்?
காட்டரளியும்,கள்ளிச்செடியும்
கூடக் கவிதைதான் நமக்கு..!
எதுகையும் மோனையும் இயைபும்
அடுக்குத்தொடர் இரட்டைக்கிளவி
என எல்லாம் அமைந்த எம்மொழி .

இலக்கியம் என்ன ஆனது?
எங்கே எம் தமிழ்ப் புலவர்கள்.?
தமிழ் இனி மெல்லச் சாகும்..
எனப் பாரதி சொன்னது பலித்திடுமா?
இன்று தமிழ் கற்றோர் நிலை என்ன?
தூக்கிவைத்துக் கொண்டாடப்படுகிறார்களா?
உலகத்தமிழ் மாநாடு நடத்தி
தமிழ் கற்றோர் நிலை உயர்த்தப்பட்டதா ?
செம்மொழி அந்தஸ்து பெற்றது..
தமிழரின் வாழ்வு செம்மை பெற்றதா ?
இலக்கியம் படித்தோரின் வேலை
இல்லாத் திண்டாட்டத்திற்கு யார்
காரணம் ?
தமிழ்நாட்டில் தமிழ் கற்றவர் நிலை
நகைப்புக்குரியதாகிப் போனது ஏன் ?


இன்று என்னானது என் உயிர்மொழி ?
காலத்தின் கோலத்தால்
மொழிக்கலப்புற்று சிறப்பை
இழக்கிறதே ..ஏன்
இனியேனும் விழிப்புறுவோம்.
தமிழ் இனி மெல்லத் துளிர்க்கும் .

'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'

எனி வே...!ஆல் ஆர் ஃபேக்ட்.
வயிற்றுக்கு என்ன வழி?

Friday, 27 March 2015

கமான் மிஸ்டர் கூல்..!

அன்றைய பீகாரின் ராஞ்சி அருகில் உள்ள
கிராமத்தில் 1981 ல் பிறந்தவர்.
பேட்மின்டனிலும் கால்பந்திலும் ஆர்வம்
கால்பந்தில் சிறந்த கோல் கீப்பர்.
அதனாலோ என்னவோ..
கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பர்.
கிரிக்கெட்டின் மீது காதல்.
1999 களில் பீகார் உள்ளூர் கிரிக்கெட்
அணியில் விளையாட வாய்ப்புப் பெற்றார் .
வறுமையின் பிடியில் இறுகாமல்
டிக்கட் பரிசோதகராக காரக்பூரில் பணி.

சுனாமி அலை உலகையே உலுக்கிய
அதே 2004 ஆம் ஆண்டு.அதற்கு
மூன்று நாட்கள் முன்பே யாருமறியாத
இந்த அமைதிப்புயல் சர்வதேச கிரிக்கெட்டில்
காலெடுத்து வைத்தது.
வங்கதேசத்திற்கு எதிரான அப்போட்டியில்
முதல் பந்தை எதிர்கொண்ட அவரை
பெவிலியன் ரன் அவுட்டோடு அன்பாக
வரவேற்றது.

வலதுகை நடுவரிசை ஆட்டக்காரராக
ஆடத்தொடங்கினார்.
அதிரடியாய் வெடித்ததெல்லாம் தனிக்கதை.
அதற்கடுத்த டிசம்பரில் டெஸ்டில் அறிமுகம் .
அதற்கடுத்த 2006 டிசம்பரில் இருபது ஓவர்
போட்டியில் அறிமுகமானார்.
அவரது கடைசி டெஸ்டும் டிசம்பரிலே
அமைந்தது எதிர்பாரா சோகம்.
ஆஸ்திரேலியத் தொடரின் தோல்விகளோடு
90 போட்டிகளோடு ரசிகர்கள் எதிர்பார்க்காத
ஓய்வுமுடிவை அறிவித்தார்.

இவரின் மிகப்பிரத்யேகமான
'ஹெலிகாப்டர் ஷாட்' விசில் போட வைக்கும்.
ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைப்பதில்
உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர்.
தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர்.
தோல்விகளால் திணறிய இந்திய
அணிக்கு கேப்டனாக 2007ல் பொறுப்பேற்றார் .
டி20  உலகக்கோப்பையில் அதிரடி வெற்றி.
அன்றுமுதல் தொட்டதெல்லாம் வெற்றிமயம் .

28 வருடக் கனவுகளோடு உலகக்கோப்பை
வெல்லும் முனைப்புடன் ஆடி
இறுதிப்போட்டியில் அடித்த தகர்த்திட முடியாத
அந்த 91* ரன்களையும் பெவிலியன் தாண்டிய
அந்தக் கடைசி சிக்ஸரையும் மறந்திட
முடியுமா..?
கிரிக்கெட்டின் கடவுளைக் கோப்பையுடன்
சுமந்த அந்தத் தருணங்கள்.
2013 ல் 'சாம்பியன்ஸ் டிராபி' கோப்பையைக்
கைப்பற்றி மூன்றுவகையான
ICC சாம்பியன்ஷிப் கோப்பைகளையும்
வென்ற ஒரே அணி என்னும் பெருமையையும்
பெற்றது இந்தியா..

இவரது சீரிய தலைமையின்கீழ்
நாற்பது ஆண்டுகளுக்குப்பிறகு டெஸ்டில்
ஆஸ்திரேலியாவை அடித்துநொறுக்கி
'ஒயிட்வாஷ்' செய்த முதல் அணி
எனும் புகழையும் பெற்றது.
ICC ஆண்டின் சிறந்த வீரர் விருதை
2008  மற்றும் 2009 ஆண்டுகளில்
பெற்றவர்.இருமுறை இவ்விருதைப் பெற்ற
முதல்வீரர் எனும் பெயரையும்
தனதாக்கிக் கொண்டார்.
2007 ல் ராஜீவ்காந்தி கேல் ரத்னா
2009ல் மதிப்புமிக்க 'பத்மஶ்ரீ' விருதுகளையும்
பெற்றதோடு மட்டுமின்றி
கபில்தேவிற்குப் பிறகு
இரண்டாவது கிரிக்கெட் வீரராக
இந்தியப் பாதுகாப்புப்படையின்
கௌரவ 'லெப்டினன்ட் கலோனல்'
பதவியளித்தும் கௌரவித்தது அரசு.

ஃபோர்ப்ஸ் இதழ் தரவரிசையில்
உலகின் 22ஆவது மதிப்புமிக்க வீரர் எனவும்
டைம் ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்ட
உலகின் செல்வாக்கு மிகுந்த நூறு
நபர்களில் ஒருவராக 2012 ல் தேர்வு
செய்யப்பட்டார்.

இது ஒன்றும் ஒரு நள்ளிரவில் பெற்ற
வெற்றிகள் அல்ல.
இவற்றிற்குப் பின்னால் அவரின் தியாகமும்
திறமைகளும் வியக்கவைப்பவை..
எத்தனையோ போட்டிகளில் வெற்றியைப்
பெற்றுத்தந்தாலும் தாண்டவமாடியதில்லை.
அவரின் அதிகபட்ச மகிழ்ச்சி என்பது
ஒன்றுமறியாதவர் போல
ஒற்றை ஸ்டம்பை கைகளில் ஏந்திச் செல்வதே.!!
ஆறுமுறை 'தொடர்நாயகன்'  விருது பெற்றவர்.
அப்படி ஒன்றும் சாதித்திராதது போல
முகத்தை வைத்துக்கொள்ளும் அந்த
வித்தையை எங்கே கற்றாரோ ?
முகத்தில் அந்த குறும்புன்னகையும்
கண்களில் அடங்காத வெறியும்
இன்னும் எத்தனை நாடுகளைப்
பந்தாடக் காத்திருக்கிறதோ ...?

இந்திய அணி லீக் போட்டிகளிலேயே
வெளியேறும் எனும் கணிப்புகளை உடைத்து
ஏழு தொடர்வெற்றிகளைப் பெற்று
தற்போது கூட ஆசையாய்ப் பெற்ற
மகளை இன்னும் நேரில் காணாமல்
தான் கொண்ட குறிக்கோளை நிறைவேற்றிட
உலகக்கோப்பையில் ஆடிவிட்டு
நாளைதான் தாய்நாடு திரும்புகிறார்.
ஒரு பந்திற்கு ஆறு ரன்கள் தேவை
என்ற நிலையிலும் ஒரு வீரன்
அதே மென்புன்னகையுடன் களத்தில்
நின்றுகொண்டிருந்தால் ஹெல்மட்டைக்
கழற்றிப் பாருங்கள்.
அது 'கேப்டன் கூல்'ஆக இருக்கலாம்.
ஆறு ஓவரில் நூறு ரன் வெற்றிக்குத் தேவையெனில்
match still alive ..?! எனக் கமெண்ட்ரி வந்தால்
அவர்தான்  நம் தல MSD ..!

அவர் போகும் பாதையில் பூக்களைத்
தூவச்சொல்லவில்லை..
கற்களையாவது வீசாமலிருங்கள்..

அவர் கற்றுக்கொண்டதும் நமக்குக்
கற்றுக்கொடுத்ததும் இதைத்தான்...
வெற்றிகள் மட்டுமே வாழ்க்கையா என்ன ?
வலிகளும் சேர்ந்ததுதான்.!

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
கமான் இண்டியா..!
கமான் மிஸ்டர் கூல்...!


Wednesday, 25 March 2015

தேவை..! மற்றுமொரு சுதந்திரம்.!

பெண்ணியம் என்பது இங்கே
என்னவாய்ப் பொருள் கொள்ளப்படுகிறது ?
 பெண்களுக்கு அந்த 33% உரிமையைப்
பெற்றுத் தருவதா ?
பெண் சுதந்திரம் பற்றி வாய்கிழிய
மேடைகளில் பேசித் திரிவதா ?
கல்வியிலும்,அரசியலிலும்
மகளிரைப் பங்குபெறச் செய்து
அவர்களைத் தாங்களாகவே
முன்னேறச் செய்வதா ?
விண்வெளிக்கு அனுப்பி
வேடிக்கை பார்ப்பதா ?

எது எப்படியாகினும் ..
இன்று இந்தப் பாரதநாட்டில்
எத்தனை சகோதரிகள் வன்புணர்வு
செய்யப்படுகிறார்கள் .?
தலைநகர் முதல் தட்டான்
பறக்கும் அடித்தட்டு கிராமம் வரை
மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும்
எத்தனை சீரழிவுகளால் நம்
சகோதரிகள் துன்பப்பட்டிருப்பார்கள்..?
'கற்பழிப்பு'  இந்த வார்த்தையை
தினசரிகளில் கண்டும் காணாமல்
எத்தனை முறை ஜஸ்ட் லைக் தட்
கடந்து சென்றிருப்பாய்..?


அன்னை தெரசாவையும்,
ஐரோம் ஷர்மிளாவையும் மட்டுமே
நாம் எத்தனை நாட்களுக்கு
போற்றிக்கொண்டே இருப்போம் ?
அரசியலுக்கு அப்பாற்பட்டு
ஈ.வெ.ரா வுக்குப் பிறகு
எத்தனை பெண்ணியவாதிகள்
பெண்ணுரிமைக்குக் குரல்
எழுப்பியிருப்பார்கள்..?
'பெண்கள் நம் கண்கள்'
எனும் சொற்றொடர் வெறும்
அடுக்குமொழி வார்த்தைப்
பிரயோகத்திற்கு மட்டுமே பயன்படல்
எவ்வளவு பெரிய அவலம்..?

பள்ளித்தேர்வுகளில் மாநில
சிறப்பிடங்கள் பெற்ற மாணவிகள்
பின்னாட்களில் சஹாராவிற்குக்
குடிபோய்விட்டார்களா என்ன ?
இல்லையெனில், அவர்களின்
திறமைகள் மழுங்கடிக்கப்பட்டு
முன்னேறவிடாமல் செய்தது எது ?
அதற்குப் பெயர்தான் 'ஆணாதிக்கமா ..?'
உலகைத் தாங்கவேண்டிய அந்தக்
கைகளைக் கட்டிப்போட்டது யார் ?
நீயாய் இருக்கும் அல்லது நானாய்
இருக்கும்.

இன்னும் எத்தனை தேவதைகளை
நாம் இழக்கக் காத்திருக்கிறோம்?
ஒரு வன்புணர்வுக் குற்றவாளி
ஊடகத்தில் வெளிப்படையாகப்
பேட்டி கொடுக்க நாம் ஏற்படுத்திய
சுதந்திரம் நம் பெண்களுக்கு ஏன்
இன்னும் வழங்கப்படவில்லை .?
அடித்துப் பறிக்கவேண்டும் என
நினைக்கிறாயா ? ஆம் எனில்,
நெரித்து ஒடிக்க மெல்லிய கழுத்தெலும்பும்
அடித்தே கொல்ல உடலமைப்பையும்
உடைய அவர்களால் எப்படிமுடியும் ?

இந்தக் கேள்விகளையெல்லாம்
நீ என்னிடம் திருப்பிக்கேட்டால்
"காஃபி ல இன்னும் கொஞ்சம்
சுகர் போடு" எனச் சொல்லிக்கொண்டே
எழுதிக்கொண்டிருக்கும் என்னால்
மட்டும் எப்படி பதில்கூற முடியும்
எனதருமை நண்பா...

Monday, 23 March 2015

நீ கேளு நண்பா...

என்னடா  கவிதலாம் எழுதுறியாமே?
லவ்வு கிவ்வு பண்ணுறியாடா ?
அப்டினு நீ கேட்டா நா ஒன்னும்
சொல்லமாட்டேன் நண்பா..
அதெல்லாம் இல்லடா ..நம்மளலாம்
யாருடா லவ் பண்ணுவா ?
சும்மாதான் எழுதுறேன்னு சொல்லுவேன்.
நீ அத நம்பிருவியாக்கும்.?
திரும்பவும் கேப்ப ...
அட போடா நீ வேறனு சொல்லி
ஒரு ஸ்மைலி போடுவேன்.
டேய்..எல்லாம் தெரியும் ..சொல்லுடானு
நீ சொன்னா ....
தெரியும்ல அப்பறம் என்ன மானாவுக்கு
என்ட்ட கேக்குற ..மூடிட்டு கெளம்பு..
அப்படினு சொன்னா கோவப்படாத நண்பா...
மறுநாள் காலைல
hi nanba..
அப்படினு மெசேஜுவேன்..
இல்லனா hi da busy ya
அப்படினு 'வாட்ஸ் அப்'புவேன் ..
சரியா.. ஃபீல் பண்ணாத ..
இப்ப முன்னாடியே சொன்னதுதான்...

என்னவா ....?

மூ*** கெளம்பு..

Sunday, 22 March 2015

நான் என்பது நானா ?

               இப்ப நானும் blog எழுதப்போறேன்.
இப்ப இது ஒன்னுதான் கொறச்சல் அப்டினு யாராச்சும் கேக்கனுமே?
கேட்டாலும் ஒங்களுக்கெல்லாம் ஒன்னும் சொல்லமுடியாதுங்க.
பேசுறத விட எழுதுறது ரொம்ப ஈசி எனக்கு..
சின்ன வயசுல கூட நா கட்டுரைப்போட்டில லாம் ஜெயிச்சுருக்கேன்.
ஆனா பாருங்க..இந்த பாழாப்போன பேச்சுப்போட்டில லாம் வந்ததே இல்லங்க.
நல்லா பாத்து பழகாதவங்ககிட்ட பேசவே ஒருமாதிரி இருக்கும்ல.
அத மாத்தனும்னு நெனக்கிறேன்..
                      இதேமாதிரி குஜராத்ல கூட ஒரு சம்பவம் நடந்துச்சு
அப்டினுலாம் மொக்க போட விரும்பல.
அப்படினு சொல்லுவேன் .ஆனா மொக்கதான்.
உள்ள வந்தாச்சுல்ல , கேட்டுட்டுதான் போகனும் .
க்ளாஸ்ல communication லேப்ல க்ரூப் டிஸ்கசன்னு பேச விடுவாய்ங்க.
நல்லா பேசுனாதான் வேலக்கி சேத்துக்குவாய்ங்களாம்.
ஏன்டா ஒங்களுக்கு கம்பெனில வந்து நாங்க வேலபாக்க போறோமா..?
இல்ல தொனதொன னு பேசிக்கிட்டு இருக்கப் போறோமா..?

'அதிகம் கேள்;குறைவாகப் பேசு' அப்படினு திருவள்ளுவரே சொல்லிருக்காருடா..
திருவள்ளுவர் எங்கடா இதெல்லாம் சொன்னாரு வென்னனு யாரும் கேக்கப்படாது.
எவ்வளவோ சொல்லிருக்காரு.இதச் சொல்லிருக்க மாட்டாரா ?
ஆமா நம்ம ஏன் இதெல்லாம் பேசிட்டுருக்கோம்? யாரு சொன்னா நமக்கென்னங்க.

டாபிக் மாறுது .
கட் கட்..
எங்க விட்டோம்.?
ம்ம்.
                       பேசுறத விட எழுதுறது ரொம்ப ஈசிங்க.
இப்ப என்னதான்டா சொல்ல வர்ற ? னு யாராச்சும் கேட்டா ..
யோவ் .நீ ஒன்னும் படிச்சுக்கிழிக்கவேணாம் ..கெளம்பு .
             அப்படிலாம் ஒங்கள சொல்லுவேனா ?
 (ஐயோ..சோத்துல வெசம் வச்சுருவாய்ங்களே)
அதுனால இப்ப என்ன சொல்ல வறேன்னா ?...
அடேய் அந்தக் கருமத்தத் தான் ரொம்பநேரமா பெனாத்துற
 அப்டினு ஒங்க மைண்ட்வாய்ஸ் கேக்குது.இனியும் சொல்லலனா
இங்க வெட்டுக்குத்து நடந்து blog ரத்தக்களறி ஆகவேணாம் .
அதுனால...
அட நாதாரி என்னடா இன்னும் இழுக்குற ? அப்டிங்குறீங்களா?..
சொல்ல விடுய்யா மொதல்ல..
நா இனிமே பேச நெனக்கிறதெல்லாம் எழுதுவேனாம் .
நீங்கவந்தா மட்டும் போதும் .
ச்சீ.. நீங்க பாத்தா மட்டும் போதும் .
ஓகே வா..