Total Pageviews

Sunday, 7 June 2015

எது கவிதை ..?

படம்:முகநூல்

பழநி சரவணபவன். மதிய உணவு சாப்பிடுவதற்காகப் போய் அமர்கிறேன்.பக்கவாட்டு வட்டமேசையில் இளம் தம்பதியர் சிறு குழந்தையுடன். அளவு சாப்பாடு வருகிறது.கூடவே ஒரு தட்டு முழுக்க வட்டக்கிண்ணங்களில் சாம்பார்,ரசம்,குருமா,மோர் என..
சாப்பிடத் தொடங்குகிறார்கள்.
        "சாம்பார்ல புகைவாசணை வருது" என்கிறாள் அந்தச்சகோதரி. "உன் சமையலுக்கு இது எம்புட்டோ பரவாயில்ல" எனச் சிரிக்கிறார் அவர். "வீட்டுக்கு வாங்க இருக்கு உங்களுக்கு.." எனச் செல்லமாய் அதட்டுகிறாள்.

       அய்யோ க்யூட் ....
கவிதை போல அவ்வளவு அழகு. சுற்றிலும் நிகழ்கவிதை நிகழ்கையில் கவிதை தேடி எங்கு அலைந்து கொண்டிருக்கிறாய் விக்னேஷ் ? என கேஷியரின் அருகில் உள்ள பொம்மை  கேட்பது எனக்கு மட்டும்தான் கேட்கிறதா ?


No comments:

Post a Comment