Total Pageviews

Tuesday, 26 May 2015

பேசாத பேச்செல்லாம்...

     வாழ்க்கை ஒருகட்டத்தில் இல்லையில்லை ஒரு புள்ளியில் சூன்யமாகிறது..அதுபோன்ற பல புள்ளிகளை இன்னும் சந்திக்கவேண்டி வரலாம்.திசைகள் மாறலாம்.தீர்வுகளும் ஏற்படலாம்.மேலைநாட்டுத் தத்துவங்களில் ஆகச்சிறந்ததாய் இதைச் சொல்வேன்.
"Only one thing is certain.that is, nothing is certain."ஆம். நிலையாமை ஒன்றே நிலையானது இவ்வுலகில் .
சூழல்களே முடிவுகளைத் தீர்மானிக்கின்றன.
     
            தாய், தந்தை, சகோதரிகள் மற்றும் அவள். அனைவரது அன்பு இவற்றைவிட கடவுள்,கோவில்,வழிபாடு,இவையெதுவும் பெரிதில்லை அல்லவா ? ஆம் எனில் நீயும் என் தோழனே. .

            நாத்திகம் என்பதென்ன ? கடவுள் நம்பிக்கைகளுக்கு எதிரானதல்ல. மூடநம்பிக்கைகளுக்கு எதிரானது.
கோவில்களுக்குச் செல்வேன். விழுந்தும் வணங்குவேன் . திருநீறும் இட்டுக்கொள்வேன். ஏனெனில் என்னைச் சார்ந்தோரின் நம்பிக்கை அது. அதீத நம்பிக்கை ,இந்த அன்புதான் சிவமெனில் நாத்திகன் ஏன் வேல்தாங்கக் கூடாது.? ஏன் மொட்டையடிக்கக் கூடாது ? ஏன் அலகுகுத்திக் கொள்ளக் கூடாது ?

            சிவத்தை விடவும் அன்புதான் பெரிதென்று அதன்பால் கட்டுண்ட முழு மனிதன் எவனோ அவனே 'நாத்திகன்' என்பேன். அன்பே சிவம். அதீத அன்பும் நம்பிக்கையும். அதுதானே கடவுள்!

          இழப்புகளும் இயற்கைதானே ..! ஆனால் இந்த இழப்புகளின் அளவைப் பொறுத்து அதன் தாக்கம் இருக்கத்தானே செய்யும்.அவளின் குரல் கூடவே இல்லையெனில் ,
பிரிதொன்றால் நிரப்பவியலா வெற்றிடம் ஒன்றுண்டு எனக்குள்..

கவிதை, கடவுள், கருமம், மயிரு, மட்டை எதுவுமின்றி
சுயநலமிக்க கிறுக்கனாய் மொட்டைத்தலை விக்னேஷ் பாப்பா .


No comments:

Post a Comment