வெளிநாட்டிலிருந்து தோழி ஒருத்தி அலைபேசுகிறாள். ஹலோ ..எப்டி இருக்க ? என்ன பிஸியாய்ட்டியா ? ரொம்ப நாளாச்சு.. என்கிறேன். அதெல்லாம் இல்லடா..நல்லா இருக்கேன். நீ நல்லா இருக்கியா ? ஊருல மழையெல்லாம் பெய்யுதாடா ?. ஒரு கவித ஒன்னு சொல்லுடா ப்ளீஸ் என்கிறாள். கவிதையா ? நடந்து போய்க்கிட்ருக்கேன். ஈவ்னிங் சொல்றேன் கண்டிப்பா என்கிறேன். வேணும்னா இப்ப இருக்க அட்மாஸ்பியர் சொல்லட்டா ? என்கிறேன். சரி சொல்லுடா என்கிறாள்.
ஒரு தாத்தா அவரோட பேரன சைக்கிள்ல வச்சு ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறாரு . ரெண்டு கையையும் சீட்ல ரெண்டு பக்கமும் நல்லா பிடிச்சுக்க சொல்லிட்டு கையில ஒக்காந்துற கூடாதேனு பாத்துப்பாத்து இலேசா ஒக்காந்து பேசிட்டே ஓட்டிட்டுப் போறாரு. பேக் வெய்ட் பின்னாடி இழுக்குது .
தண்ணி ஊத்துற சத்தம்.மாடு மூச்சா போகுது. டேய் லூசு எனச் சிரிக்கிறாள்.
அப்புறம்..
அந்த வீட்டு ஹோம் தியேட்டர்ல "இப்படியே எங்கவேணா தூக்கிகிட்டுப் போ..."னு சாங் ஓடுது.. விசாலும் ஸ்ருதியும் டூயட் பாடுறாங்க..
ரெண்டுநாளக்கி முன்னாடி பேஞ்ச மழத்தண்ணி இன்னும் ரோட்டுக்கு நடுவுல பள்ளத்துல கெடக்கு. நம்மூரு ரோட்டப் பத்திதான் ஒனக்கே தெரியுமே..
கார் ஒன்னு போகுது. நல்லவேள வெலகிட்டேன்.இல்லனா தண்ணி தெறிச்சிருக்கும் .
எட்டுமணியாகப் போகுது.இப்பதான் ஒருத்தரு பால் கறக்குறாரு. பெரிய கல்லு ஒன்னு மாட்டுக்கு முன்னாடி கட்டிருக்கு.அத நாக்கால நக்குது. கன்னுக்குட்டி செத்துப்போச்சு போல.
மறுமுனை அமைதியாய் இருக்கவே, ஏய்,.கேக்குறியா என்கிறேன். ம்ம்..கேக்கறேன்டா என்கிறாள்..
நம்ம ஊர் ரோட்டோரம் புளியமரம் இருக்குல..நம்பர்லாம் போட்ருப்பாங்களே..அதுல ஏதோ குருவி கத்துற சத்தம்.அணில் ஒன்னு வேகமா மரத்த விட்டு எறங்கி ஓடுது.
அப்புறம் ...
டேய்..போதும் விக்னேஷ். இதுக்கு மேல என்ன கவிதை வேணும் ?..
I love u da stupid.how you carry on this type of centiments,emotions and bla bla ... with you ? dear. எனச்சொல்லி நிலைக்கதவில் சாய்ந்து கொள்கிறாள்.
(ஃபோனில் எப்படி கதவில் சாய்வது தெரியும் என அறிவுஜீவித்தனமாக நீ கேட்டால் did you are loved by anyone ? அன்புன்னா என்னனு தெரியுமா என ஆரம்பித்து மனசு,மண்ணு, ம**, ப்ளா ப்ளா ப்ளாவென பல பக்க வசனம் சொல்வேன் என எதிர்பார்க்கிறாயா நண்பா ? நோ..நெவர்.கொஞ்சம் தண்ணி குடி நண்பா என வேண்டுமானால் சொல்வேன்.)
நிலைக்கதவில் சாய்ந்து கொள்கிறாள்.
take care dear எனச்சொல்லி ஃபோனை வைக்கிறேன்.
யோசிக்கிறேன். still.....
எது கவிதை விக்னேஷ் ..??
Total Pageviews
Sunday, 7 June 2015
எது கவிதை டியர்..?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment